Description |
அந்த வீட்டில் சந்தோஷ தேவதை நிரந்தர வாசம் செய்தாள். “ அன்பு என்னும் தோட்டத்தில் ஆசை என்ற விதைகளை விதைக்க அதற்குப் பாசம் என்னும் நீர் ஊற்றி நேசம் என்னும் உரமிட்டு நம்பிக்கை என்னும் வேலி அமைத்து பாதுகாத்து வளர்த்தாலும் புல்லுருவி என்பது முளைக்கத்தானே செய்யும். அதை முளையிலே கிள்ளி எறிந்து விட்டால் விதைகள் பூவாகிக் காயாகிக் கனியாகி அனைவருக்கும் பலன் தரும்.” இதைப் புரிந்து கொண்ட இந்த உள்ளங்கள் தங்கள் இல்லத்தைச் சந்தோஷப் பூக்களால் அலங்கரித்தன! |