Description |
“இப்ப எதுக்குடி அவங்களை இப்படிப் பார்க்குற...?" என்றான் முகிலன். “எப்படி மாமா... இப்படி இருக்காங்க ரெண்டு பேரும். நாம கூட சில நேரம் சண்டை போடுறோம். ஆனா, சுமதியைப் பார்த்தா எனக்குப் பெருமையா இருக்கு...” என்றாள். 'ஒரே ஒரு விஷயம்தான் மதி. சுமதி, முத்துவை நல்லாப் புரிஞ்சு வச்சிருக்கா... அவனும் மனைவிகிட்ட தோத்துப் போறான். மனைவி கிட்ட தோத்துப் போற எவனும், வாழ்க்கையில் தோற்றதா சரித்திரம் இல்லை..." என்றான் மதி. “அப்ப, நீங்க மட்டும் ஏன் அப்படி இல்லை ...?" என்றபடி அவள் முறைக்க, “ஆரம்பிச்சுட்டாடா...?" என்றவன்... “நான்தான்... முழுசா உனக்குள்ளே வந்துட்டேனேடி. அப்புறம் எங்க இருந்து தோத்துப் போக...?” என்றான் காதலாய். “அது என்னவோ நிஜம்தான் மாமா...' என்றபடி... அவன் தோள் சாய... |