Description |
கதிரவன் அவளை இளங்கலை மட்டுமல்ல, முதுகலை பட்டயப் படிப்பும் படிக்க வைக்க வேண்டும் என்று தனக்குள் உறுதி எடுத்துக் கொண்டான். அவனின் மனத்தில் உள்ளதைப் பற்றி ஏதும் அறியாதவளாய், “அத விடுங்க! அதெல்லாம் நான் அடிச்சுத் தூள் கிளம்பிடுவேன். இப்ப வாங்க... கடலுக்குப் போலாம்ங்க...” எனக் கணவனிடம் குழந்தையாய் அடம் பிடிக்க, இப்போது பிடிவாதக்காரக் குழந்தையாய்த் தெரியும் மனைவியைப் பட்டதாரியாக்கும் கனவுடன் அவளுடன் ஆவலுடன் நடந்தான். தூரத்தில் கடலின் பேரிரைச்சல் அவர்களின் ஓடப் பயணத்திற்காகக் காத்திருந்தது. அந்த ஓடப் பயணத்தில் அவர்கள் செல்லவிருப்பது ஆழ்கடல் சங்கமத்திற்கு மட்டுமல்ல... வாழ்க்கையின் சங்கமத்திற்கும். சுகமாக நினைத்துக் கொண்டான்... நின்மேல் காதலாகி நின்றேன் கனலியே! எனக் கதிரவன். |