Description |
தீதும் நன்றும் பிறர்தர வாரா என்று அன்று எடுத்துக் காட்டாய் விஸ்வாவின் ஜாதகத்தைக் கணித்தவர் சொன்னதைக் கனகவேல் நன்றாகவே உணர்ந்தார். அவர்கள் செய்த பாவத்தின் பலனை ஒவ்வொரு நொடியும் அவர்கள் அனுபவித்துக் கொண்டிருந்தார்கள், அவர்களின் வாரிசுகளின் மூலம். எந்தத் தொழிலிலும் ஒரு நேர்த்தியைக் கடைப்பிடிக் கும் விஸ்வா, நகைத் தொழிலில் இருந்து முழுவதுவாய் விடுபட்டு, சங்கவியுடன் மட்டுமல்லாது தனியேயும் இன்டீரியர் டிசைனிங் செய்வதில் தன் திறமையை நிரூபித்து மென் மேலும் வளர்ந்து கொண்டிருந்தான். எப்போதாவது காஞ்சனாவிற்கு நகை மாதிரிகள் வடிவமைப்பதில் உதவியும் செய்வான். அவர்கள் என்றும் இதே வளத்துடன் நலமாய் வாழட்டும்... |