Description |
திருமணம் முடிந்து முதல் பரிசாகத் தேனிலவு பயணச்சீட்டோ இல்லை விலை யுயர்ந்த பொருள் ஏதேனும் இருக்குமெனப் பார்த்தால், அதிலோ ஒருகாலத்தில் வர்ணா ஆசைப்பட்டதாய் அவ னிடம் குறிப்பிட்ட ஆசிரியர் பணிக்கான பி.எட் பட்டப் படிப்பின் விண்ணப்பம், அட்டகாசமாக அவளைப் பார்த்துச் சிரித்திருந்தது. அனைவரும் கேலிச் செய்து சிரித்ததில் வர்ணா முறைப்பது போல் முகம் வைத்தாலும், அவள் மனதில் ஒருநாள், ஒரே ஒரு முறை சொன்னதை இத்தனை நினைவு வைத்துச் செய்யும் விஷ்ணுவின் காதல் மீது எல்லையில்லாப் பிடித்தமே அதிகரிக்க, அதில் நிறைவாய், இல்லையில்லை கண்களில் மிகுந்த ஒற்றை நீர்த்திவலை ஆனந்த நீரால் அவனிடம் நன்றி கூறி, இதழ் மலர்ந்து புன்னகைத்திருந்தாள். |