Description |
சங்கீதாவிற்குப் பெண் குழந்தை பிறந்து நான்கு மாதங்கள் ஆகியிருந்தது. சென்னையில்தான் இருந்தாள் மாதவன் இப்போது, ஊரில் உள்ள நிலங்களைப் பார்த்துக் கொண்டு, அன்புடன் சேர்ந்து தொழில் செய்கிறான். அவர்களின் தொழிலுக்குத் தேவையான மூலப் பொருட்கள், அவர்கள் தோட்டத்தில் இருந்தே கிடைக்கும் மாதிரி, வழிவகை செய்திருந்தான். எது எப்படி மாறினாலும், சங்கீதா மட்டும் அப்படியே தான் இருந்தாள். இதில் அவள் மட்டும்தான் குழந்தை பெத்துக் கஷ்டப்படுவதைப் போல் பில்டப் காட்டுவதில் அவளுக்கு மிஞ்சி யாருமில்லை. கயல்விழிக்கு ஒரு மாதத்திற்கு முன்புதான் திருமணம் முடிந்திருந்தது. அவளையும் உள்ளூரில் சின்னுவிற்கு (சின்ன பாண்டி) தான் கட்டிக் கொடுத்திருந்தனர். மாறன், பள்ளி இறுதி வகுப்பில் இருக்க...மங்கையும் அவனும் இப்போதும் அதே வீட்டில்தான் இருந்தனர் சாந்தா எப்பவும் போல் தனியாகத்தான் இருந்தார். |