Description |
“கேமராவெல்லாம் எடுத்து வைக்கத் தெரியுது. டைனிங் டேபிள்ல இருக்குற வெந்நீரை எடுக்கத் தெரியல” என்று மனைவியைக் கடிந்தபடியே வண்டியை ஓட்டிய ரகுவரனின் எண்ணங்களில், செயல்களில் மூளையில், இதயத்தில் முழுக்க முழுக்க நிறைந்திருப்பது மோகனா மட்டுமே என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை!! காதல்-ன்றது கவர்ச்சியான உறை போர்த்தியிருக்கிற வெற்று டப்பா மாதிரி! கவர்ச்சி குறைந்ததும் டப்பாவைத் திறந்து பார்தீங்கன்னா, உள்ள வெறும் காத்து தான் வரும்! அடிப்படை அன்பு மட்டும் தான் எல்லா வகையான உறவுகளையும் பலப்படுத்துது! அந்த அன்புக்கு அக்கறை, கோபம், சிரிப்பு, சந்தோஷம் துக்கம், அழுகைன்னு பற்பல பெயர் இருக்கு! ஒரு உறவுக்குள்ள இணைகிற இருவருக்கிடையில் வெளிப்படுகிற எல்லா உணர்வுகளுக்குப் பின்னாலயும் அன்பு மட்டும் தான் ஆட்சி செய்யுது! காலத்துக்கும் குறையாத அன்பிருக்கும் இடத்தில் என்றும் இசைக்கும் மோகன ராகம்! |