Description |
முதல் இரண்டே வருடங்களில் தன் ஐ.பி.எஸ் பயிற்சி, ஒரு வருடப் பணியின் பயிற்சி காலம் வேலை முடித்து சென்னையிலேயே போஸ்ட்டிங்கும் வாங்கி விட்டான். ஆனால், ராதா லண்டனில் ஒரு கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்திருக்க, ஒரு வருடம் வேலை பார்த்த பிறகுதான் திருமணம் என கிருஷ்ணாவின் பிடிவாதத்தாலேயே அவர்களது திருமணம் மீண்டும் ஒரு வருடம் தாமதமானது. அவன் அப்படி சொல்லிக் கொண்டாலும், அவள் ஒரு வருடம் வேலை பார்க்க வேண்டும் என்ற அவளது ஆசையை நிறைவேற்ற வேண்டியே அவ்வளவு பிடிவாத மாக நின்றான். அது அவளுக்கும் புரியவே, ராதாவால் அதைத் தவிர்க்க முடியவில்லை.அதில் ராதாவுக்கு அவன்மேல் அவ்வளவு கோபம். ஆனாலும் அதை மறைத்தவாறே மணமேடையில் அமர்ந்திருந்தாள்... |