Description |
அவனுக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் அவளே செய்தாள். ஆனால் அவனிடம் மனம் விட்டுப் பேச முடியாதது பெரும் பாரமாக மனதை அழுத்தியது. தீனாவும் அவளிடம் எப்பொழுது, எப்படிப் பேசுவது எனத் தெரியாமல் தவித்துப் போய்த்தான் இருந்தான். இரண்டு நாட்கள் கடந்து, மூன்றாம் நாள் மாலையில் அவனைக் குளிக்க வைத்துக் கொண்டிருந்தாள் ஜனனி. அவன் மறுத்தும் அவள் கேட்கவில்லை . கடந்த மூன்று நாட்களாகவே தன்னை விட்டு இமைப் பொழுதும் நீங்க மறுக்கும் அவள் செய்கையை அவனும் உணர்ந்து கொண்டுதானே இருக்கிறான்.. |