Description |
என்னைப் பொறுத்தவரைக்கும் தப்பை உணர்ந்து வருந்துறவங்களை வதைக்கக் கூடாது. அது பிரயோஜனமில்லாதது. ஒரு பெண்ணைப் பார்த்தா கல்யாணம் பண்ணிக்க ஆசை வரணும்னு சொல்லிட்டு இருந்த எனக்கு, உன்னைப் பார்த்தப்போ மட்டும்தான் அந்த எண்ணமே வந்துச்சு. ஆசைப்பட்டுக் கல்யாணம் செஞ்சுட்டு நீ ஏதோ தப்பு பண்ணுனன்னு கோபத்துல உன்னை ஒதுக்கிட்டா... அப்புறம் என்ன இருக்கு எனக்கு வாழ்க்கையில? இனி இந்த மாதிரி எந்தத் தப்பும் நீ செய்யாம இருக்கணும். நானும் எந்தத் தப்பும் பண்ணாம இருக்க முயற்சி பண்ணுவேன். ஒருவேளை தப்பு பண்ணுனா, சொல்லிப் புரியவை, கேட்டுக்குறேன். இப்படி ஒருத்தரையொருத்தர் அனுசரிச்சு வாழ்றதுதானே வாழ்க்கை ?" என்றான்... |