Description |
இருவரும் ஒருவரைப் பார்த்து மற்றவர் ஆசையாகப் புன்னகைத்துக் கொண்டார்கள். “என்னங்க... முதல்ல லேகா அக்காவுக்குப் போன் பண்ணுங்க. அவங்க இல்லன்னா, இன்னைக்கு நாம சேர்ந்திருக்கவே முடியாது.” அவள் சொல்ல, “இப்போ நான் போன் பண்ணா... பொண்டாட்டிகிட்டே பேசாமல், இப்போகூட எனக்குப் போன் பண்றன்னு காச்சிடுவா... நான் மாட்டேன். வேண்ணா நீ பேசு..." உரைத்தவன், தன் அலைபேசியை ஆன் செய்து கொடுக்க, சாந்தி அவளிடம் பேசச் சென்றாள். தன் தோழியிடம் முகம் சிவக்கப் பேசிக் கொண்டிருக்கும் மனைவியைக் காதலாய் பார்த்திருந்தான் பிரசன்னா.. |