Description |
இவரது கதைகளைப் படித்த போது உண்மையில் இப்படியாக எழுதக்கூடிய ஒருவர் இதுநாள் வரை இலக்கிய உலகத்தால் அறியப்படாது போனது எப்படி என்ற கேள்வியே என்னுள் அதிகம் எழுந்தது.அழகியபெரியவனின் கதைகள் மூலம் அப்பகுதி மக்கள் வாழ்வை நான் ஓரளவு உள்வாங்கியிருந்தாலும் கவிப்பித்தனின் கதைகள் இன்னும் சற்று கூடுதலாக அம்மக்களது வாழ்வை நெருக்கமாக காண்பித்தது. |