Description |
தென்பாண்டி நாடாகிய நெல்லை மாவட்டம் சங்கரநாயினர்கோயில் என்னும் ஊரில், பண்பாடுள்ள பழந்தமிழர் குடி ஒன்றில் கி.பி. 1902ஆம் ஆண்டில் தேவநேசன் பாவாணர் பிறந்தார். பாளையங் கோட்டையில் பள்ளி இறுதி வகுப்பை முடித்தார். இயல்பிலேயே தமிழ் ஆர்வம் கொண்ட அவர், பின்னர் மதுரை தமிழ்ச் சங்கத்தின் பண்டிதர் தேர்வு எழுதிச் சிறப்புடன் வெற்றி பெற்றார். |