Description |
தவறு செய்பவர்கள் எப்பொழுதும் தப்பித்துக் கொண்டு இருக்க முடியாது ஏதாவது ஓர் இடத்தில் அகப்பட்டு உண்மை வெளிவரும்.ஊழல் அமைச்சர்களைப் பதவியில் இருந்து இறக்க தகுந்த ஆதாரங்களைக் கொடுக்கும் பத்திரிக்கையாளரான லதிகாவை கண்டால் அரசியல்வாதிகளுக்கு வெறுப்பாக இருக்கிறது. லதிகாவால் பதவியில் இருந்து தூக்கப்பட்ட குமரப்பன் அவளைக் கொலை செய்யும் முயற்சியில் ஈடுபடும் போது அவளின் தோழி பாரதியால் காப்பாற்றப்படுகிறாள். தங்களின் திட்டத்திற்குப் பாரதி தடையாக வருவதால் அவளைக் கொலை செய்ய முயன்று அதிலும் தோல்வியே அடைகின்றனர்.லதிகாவை கொலை செய்ய அனுப்பிய தங்களின் அடியாட்களைப் பார்த்த பாரதி போலீஸில் சொல்லிவிடுவாள் என்று பயந்த குமரப்பன் அவர்களையும் கொலை செய்துவிடுகிறான்.அமைச்சர்கள் செய்யும் ஊழலுக்குத் துணைபோன முதலமைச்சரையும் முடிவுக்குக் கொண்டு வர ஆட்சி கலைக்கப்படுகிறது. |