Description |
காந்தி தன் வாழ்வே தான் விட்டுச் செல்லும்ஒ செய்தி என இயம்பியவர். ஒட்டுமொத்த வாழ்வையும் பரிசோதனைக் களமாக ஆக்கி எல்லாவற்றையும் நேர்மையாகப் பதிவு செய்தவர். தனது நிலைப்பாடுகளுடன் வரலாற்றில் முட்டி மோதி அவற்றைத் தொடர்ந்து மறுபரிசீலனைச் செய்யத் தயங்காதவர். இத்தகைய வாழ்க்கையைக் கொண்டிருந்த மகாத்மாவைப் பின்தொடர்ந்து அதே போன்ற வாழ்வை வாழத் தலைப்பட்ட காந்தியின் அணுக்கத் தோழர்கள் குறித்த நூல் இத. |