Description |
இந்தத் தொகுப்பில் இருக்கும் கவிதைகள், வார்த்தைகளால் வயலின் வாசிக்கின்றன. வியப்பூட்டும் விரல்களால் வீணை மீட்டுகின்றன. மிருதுவான உணர்வுகளால் மிருதங்கத்தை இழைய விடுகின்றன. சில இடங்களில் அன்பின் வேகத்தில் ஆதிப் பறையாய் அதிர்ந்து நம் இதயத் துடிப்பையும் இனிதாய் எகிற வைக்கின்றன. இந்தத் தொகுப்பின் பக்கங்களைப் புரட்டப் புரட்ட, அது நம்மைப் புரட்டுகிறது. பேரின்ப அனுபவங்களை அறிமுகம் செய்கிறது. மனம் நிறைய காதலோடும், அது தரும் கிளர்ச்சியோடும், ஒரு மழைக் காலத்திற்குள் நடந்துசெல்வது போன்ற சில்லிப்பும் கதகதப்பும் கலந்த உணர்வை இந்த நூல் அருள்கிறது. |