Description |
துரை ஆனந்த் குமார், வேலூரை சொந்த ஊராகக் கொண்டவர். சுகாதாரம், பாதுகாப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிபுணராக அபுதாபியில் அரசுத்துறையில் 2008 முதல் பணிபுரிகிறார். 24 ஆண்டுகால தொழில்முறை அனுபவம் உடையவர். 2018 ஆம் ஆண்டு முதல், சிறுவர்களுக்கான கதை சொல்லுதல், கதை எழுதுதல், சிறார் குழு ஒருங்கிணைப்புப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுகிறார். KIDS TAMIL STORIES சிறார் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இருந்து, அந்தக் குழுவின் 27 குழந்தைகளைச் சிறுகதைகள் எழுதவைத்து, ‘பேனா பிடித்த நட்சத்திரங்கள்’ என்னும் இருமொழிப் புத்தகத்தைத் தொகுத்து வெளியிட்டார். எல்லாச் சிறாருக்கும் நல்ல சிந்தனைகளும், கதைகளும் சென்று சேர வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறார். |