Description |
நவீன வாழ்வின் அசுர மாற்றங்களாலும் அன்றாடங்களில் திரிந்து விடாத வாழ்வின் பதிவாக ஊர் வழக்கிலும், திணை மரபுடனும் இக்கதைகள் புழங்குகின்றன. இதில் துரோகம், வஞ்சகம், ஏமாற்றம் என உழன்றும் நெஞ்சுரமும் நேர்மையும் குறையாத மனிதர்களுக்கும் மாடன், சுடலை, அம்மன் தெய்வங்களுக்குமான வேறுபாடுகள் ஒரு சமயத்தில் மறைந்து போய் விடுகிறது. "வானம் எண்ணெய் மெழுகிய அம்மனின் முகம்போல கருவிக்கொண்டு நின்றது” என்று நகர்த்தும் ஆளுமை மிக்க கதைசொல்லியின் கண்கள் இவை. |