Description |
நூலின் பெரும் பகுதி காந்தியுகத்துப் பெண்களின் வாழ்க்கைக் கதைகளால் நிரம்பி ஒளிர்கிறது. தில்லையாடி வள்ளியம்மை, சொர்ணத்தம்மாள், ருக்மணி லட்சுபதி, கடலூர் அஞ்சலையம்மாள், அம்புஜத்தம்மாள், பர்வதவர்த்தினி அம்மையார் போன்ற பல தமிழகப் போராளிகள் மட்டுமின்றி குஜராத்தின் பத்மாவதி ஆஷர், உஷா மேத்தா , வங்க தேசத்தின் கமலா தாஸ் குப்தா, அஸ்ஸாமின் கனகலதா பரூவா, கிரண் பாலா போரா, கன்னடத்தின் யசோதரம்மா தாசப்பா என்று தேசத்தின் பல நிலப்பரப்புகளின் வீர மகளிரை நமக்கு அறிமுகம் செய்திருப்பது இன்னொரு சிறப்பு. |