Description |
கடை நடந்து வரும் கடந்த 41 வருடமாக இதே தெருவில் சாமிகள் ஊர்வலம் போகின்றன. தீப நாட்களில் பத்து நாளும் காலையும் மாலையும் உற்சவ மூர்த்திகள் இந்த வழியில் தான் போகிறார்கள். புகழ்மிக்க திருவூடல் உற்சவமே இந்த கடையின் அருகே தான் நடக்கிறது. ஒருநாளும் கடவுள் கோவிச்சுக்கிட்டதே இல்லை. எல்லாம் அதனதன் போக்கில் அமைதியாக போய்க் கொண்டுதான் இருக்கிறது. ஒரு பிரச்சனையும் இல்லை. ஆனால் இப்போது கோயில் வடிவில் மக்கள் ஒற்றுமையை சீர்குலைக்க இந்துத்துவ அமைப்புகள் நெருப்பைப் பற்ற வைக்கிறார்கள். |