Description |
‘தோழர் சங்கரய்யா என்றாலே நம்பிக்கை பெருக்கெடுக்கும், நாளங்கள் முறுக்கேறும் தன் வாழ்நாளெல்லாம் விடுதலைக்காகவும், நாட்டு மக்களின் உயர்வுக்காகவும், தமிழ் நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகவும் அளப்பரிய தியாகங்களை செய்தவர். தனது 101வது வயதிலும், இளம் தலைமுறையினருக்கு எழுச்சியூட்டும் கனலாக நம்மோடு வாழும் தோழர் என்.சங்கரய்யாவின் வாழ்க்கைப் பயணத்தையும், உரைகளையும், பேட்டிகளையும், தொகுத்தால் அதுவே பல பாகங்கள் கொண்ட நூலாக இருக்கும். அன்புத் தோழர் ச.லெனின் அதில் ஒரு சிறு பகுதியை தனது நூலில் கொடுத்துள்ளார். |