Description |
பகல், இரவு அல்லது வசந்தம், குளிர், மழை, கோடை எனப் பருவங்கள் அல்லது பொழுதுகள் சார்ந்து மாறுபடுகிற மனிதமனதின் உளவியலைச் சித்தரிக்கும் கவிதைகள் பல தொடர்ந்து எழுதப்படுகின்றன. படிமம், உள்ளீடு, இருண்மை நிறைந்த சொற்களின் வழியே மனித மனதின் உள்ளடுக்குகளை வெளிப்படுத்த முயலும் கவிதைகளும் பரவலாகியுள்ளன. இவ்வாறான கவிதையின் பல்வேறு வடிவங்களுக்கிடையே ஒரு வாழ்வின் இருண்மை நிறைந்த பக்கங்களை எழுதுவதற்கு மனிதமனம் குறித்தும், சமூக இயங்கியல் குறித்தும் தனித்த கவனம் தேவைப்படுகிறது. அது கவிஞர் ராம்போ குமாரின் இந்தப் ‘புளிக்கும் வெயில்’ கவிதைத் தொகுப்பில் நிகழ்ந்திருக்கிறது. |