Description |
குழலோரத்தில் புத்தன் முகம்’ தலைப்பிலேயே வாசகர் நெஞ்சங்களில் தன் முகம் பதிக்கிறார் கவிஞர். வாழ்வின் ஒவ்வொரு நிகழ்வையும் கவிதையாக்கியிருக்கும் இவரது வல்லமை போற்றுதலுக்குரியது. ‘இந்த வானத்தின் நிர்வாணத்தை என் இமைகள் கொண்டு மட்டுமே மூட முடியும்.’, ‘சாலையின் எதிர்த்திசையில் செல்லும் நண்பனுக்கு அனுப்பும் வார்த்தை, குறுக்கே வரும் வாகனங்களில் மோதி விபத்துக்குள்ளாகி இறந்து விடுகிறது.’ இப்படி ஒவ்வொரு கவிதையிலும் தனது கற்பனை ஆற்றலை அழகாக வெளிப்படுத்தியிருக்கிறார். ’ இந்தக் கவிதையின் மூலம் இயலாதவனின், எளியவனின் மீதான தனது பேரன்பை வெளிப்படுத்தியிருக்கிறார். கவிஞர் ரமேஷ் மாணிக்கம் தனது ஆளுமை மிக்க எழுத்துக்களால் இந்தப் பிரபஞ்சத்தை ஆள வாழ்த்துகிறேன். |