Description |
“நான் மற்றொரு முறையும் தவறு செய்துவிட்டேன் என்று எனக்குப் புரிந்தது.நான் என்ன சொன்னாலும் தவறாகப் போய்விடுமென்று தோன்றியது.அம்மாவின் கண்கள் ‘கூடாது பெனி’ எனும் கண்டிப்புடன் எல்லா இடத்திலும் என்னைப் பின் தொடர்கின்றன. “அம்மா நான் வருந்துகிறேன்.’’தாழ்ந்த குரலில் நான் மீண்டும் சொன்னேன்.நான் மிகவும் கெட்ட பையன் என்று எனக்குத் தோன்றியது.நான் அழுதுவிடப் போகிறேனோ என்றுகூட எனக்குத் தோன்றியது.அதற்கு என்ன காரணம் என்று எனக்குத் தெரியவில்லை…” |