Description |
ஆய்வு நுட்பங்களோடு சங்க இலக்கியங்களை மீளாய்வு செய்து வருகிறார் ஆர். பாலகிருஷ்ணன். சிந்துவெளி, பண்டைய தமிழகம் ஆகிய இருதுருவப் பிரதேசங்களையும் சங்க இலக்கியம் இணைக்கிறது எனும் கருதுகோளை இதுவரை யாரும் முன்வைத்ததில்லை. இது முற்றிலும் ஒரு புதிய விசாரனை முறை, திராவிடவியல் ஆய்வில் இது ஒரு புதிய உச்சம் எனலாம். தேர்ந்த முறையில், சுதேசியான கோட்பாட்டுப் பின்புலம், ஐரோப்பிய மையவாதத்தைச் சாராமை, தரவுகளிலிருந்து கோட்பாடு நோக்கி நகர்தல் சுய பிரக்ஞை முதலான இன்னும் பல அம்சங்கள் இவருடைய ஆய்வு முறையியலில் பளிச்செனத் தென்படுகின்றன. |