Description |
புதிதாக வரலாற்றையோ அரசியலையோ படிக்க விரும்பும் பெரியவர்களுக்கும் இது மிக முக்கியமான நூல். பகத்சிங் எழுதிய “நான் நாத்திகன் ஏன்” நூலை முதல் முறையாகப் படிக்கப்போகிற ஒவ்வொருவரும் அதற்கு முன்னர் சிவ சுப்பிரமணியம் எழுதிய இந்த நூலை ஒருமுறை படித்துவிட்டால் எளிமையாக இருக்கும். ”நான் நாத்திகன் ஏன்” என்ற நூலை பகத்சிங் எழுதி 92 ஆண்டுகள் ஆகிய நிலையில், அதனை வளரிளம் பருவத்தினருக்கான ஒரு நூலாக மாற்ற வேண்டும் என்கிற சிந்தனை உதித்ததற்கே நூலாசிரியர் சிவ சுப்பிரமணியம் அவர்களுக்கு வாழ்த்துகள். -இ.பா.சிந்தன் |