Description |
இப்புத்தகம் முழுக்க அவரின் ஆராய்ந்து அறியும் அறிவையும்,அனுபவப் பகிர்வையும் நுண்ணோக்குப் பார்வையும் அனுபவிக்க முடிகிறது. இவர் பள்ளியில் நிகழ்த்தும் குழந்தை நாடகங்கள் சமுதாயத்தின் அனைத்து அவலங்களையும் வெளிக்கொணர்ந்து மட்டுமின்றி குழந்தைகளின் மனது,அதற்குள் ஒளிந்திருக்கும் அத்தனை உணர்வுகளையும் பிரதிபலித்துள்ளது. இயற்கை வழி ஞானமும், பெற்ற அறிவும் சேர்ந்து, நிறைய பரிசோதனை முயற்சிகள் வழி,இந்த நூலின் வரிகள், படிப்பறிவை விட,பட்டறிவு செய்யும் மாயத்தை விளக்கியதோடு மட்டுமின்றி ஆசிரியர்களின் கடைமையை அர்ப்பணிப்பாக பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. |