Description |
சுதேச மித்திரன் ஞாயிறு மலரின் ஆசிரியராய் இருந்த காலத்தில் இரண்டு குறுநாவல்களை எழுதும் வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அந்தக் குறுநாவல்களில் முதலாவது இந்த உதயபானு. நான்கே அத்தியாயங்கள் கொண்ட உதயபானுவும் ஆறு அத்தியாயங்கள் கொண்டது இளையராணியும் ஒரே புத்தகமாக அமுத நிலையத் தாரால், ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. ஆரம்ப காலத்தில் மிகச் சுருக்கமாக எழுதிவிட்ட இந்த இரண்டையும் விரிவு படுத்த வேண்டும் என்ற அவா நீண்ட நாளாக இருந்த போதிலும் அ வ காசமில்லாததால் எழுதவில்லை . ராணிமுத்து காரியாலயத்தார் இந்த இரண்டு கதைகளையும் வெளியிட அனுமதி கேட்டபோது, அந்த வாய்ப்பை உபயோகப்படுத்தி இவற்றை சிறிது விரிவுபடுத்தினேன். அதன் விளைவாக இரண்டு கதைகளும் இப்பொழுது தனித்தனி நாவல்களாக வெளிவருகின்றன. |