Description |
நான் எழுதிக்கொண்டிருந்த மற்ற நாவல்களை மூட்டை கட்டி வைத்துவிட்டு, ஹொய்சாள சரித்திரத்திற்குள் என்னை புதைத்துக் கொண்டேன். ஹொய்சாள சரித்திர ஏடுகள் இராமானுஜரின் வாழ்க்கை சரிதம் சமண மத நூல்கள் சோழர்களின் சரித்திரம் சாளுக்கியர்களின் சரித்திரம் பஞ்சநாராயண தல புராணங்கள் பெங்களுரு அருங்காட்சியக செப்பேடுகள் என்று பலவற்றை தேடி ஆராய்ந்து, தேதிவாரியாக, சம்பவங்களை கோர்த்து பார்த்ததில், எனக்கு கிடைத்தது பஞ்சநாராயண கோட்டம். இந்த நாவலின் முக்கிய கதாபாத்திரம் இந்திரசேனா, ஒரு நபும்சகி! சரித்திரநாவல் என்பதால் அவளை அவ்வாறாகவே குறிப்பிடவேண்டியுள்ளது. அரவாணி, திருநங்கை போன்ற பதங்கள், ஹொய்சாள நாட்டில் வழக்கில் உள்ள சொற்கள் அல்ல. இன்றும் கர்நாடகாவில் திருநங்கைகளை நபும்சகி என்றே அழைக்கின்றனர். எனவே, சரித்திரம் கூறும்போது அவர்கள் வழக்கத்தையே நான் கடைபிடித்திருக்கிறேன். யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் அல்ல. காரணம் மிக உயர்ந்த கதாபாத்திரம், இந்திரசேனா... |