Description |
இந்தத் தலைப்பை நான் கொடுத்தபோது எழுதப்போகும் கதை என்னவென்று திட்டமாக எனக்குத் தெரியாது. இருந்தாலும் நீண்ட நாளாக சாதவாகனப் பேரரசின் சரித்திரத்தை அடிப்படையாகக் கொண்டு ஒருகதை எழுத வேண்டும் என்று எனக்கிருந்த அவாவைப் பூர்த்தி செய்து கொள்ளத் தீர்மானித்து ஆராய்ச்சியில் இறங்கினேன். பலன் நான் எதிர்பார்த்ததைவிட பன்மடங்கு அதிகமாயிருந்தது. வாசக அன்பர்கள் மிகுந்த ஆர்வத்துடன் கதையைப் படித்தார்கள். |