Description |
ராஜயோகம் என்ற இந்தச் சரித்திரக் கதைக்கு விரிவான முன்னுரை ஏதும் தேவை யில்லை. முக்காலே மூன்றுவீசம் சரித்திர நிகழ்ச்சிகளை ஆதாரமாகக் கொண்டே இந்தக் கதை புனையப்பட்டிருக்கிறது. குலசேகர பாண்டியன் காலத்தில் ஏற்பட்ட அரியணைப் போட்டியை மையமாகக் கொண்டு இந்த நவீனத்தைத் தொகுத்திருக்கிறேன். இந்த நாவலில் கதாநாயகன், கதாநாயகி என்று கதைக்கு அவசியமான பாத்திரங்கள் கற்பனையில் படைக்கப்பட்டிருந்தாலும் இதன் உண்மையான கதாநாயகன் அப்துல்லா வாஸப் என்கிற சரித்திர ஆசிரியன் தான். |