Description |
இருபதாம் நூற்றாண்டில் உலகம் முழுவதும் உருவான இஸ்லாமிய மறுமலர்ச்சிக்கு முதன்மை காரணமாக திகழ்ந்தவர்களுள் ஒருவர். முதலாளித்துவம், கம்யூனிஸம், அறிவியல்வாதம் உள்ளிட்ட ஆதிக்க கருத்தியல்களின் போதாமையை அம்பலப்படுத்தியவர். மானுட விடுதலைக்கு இஸ்லாமையே தீர்வாக முன்வைத்தவர். அதிகாரபீடங்களின் ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல், இஸ்லாமிய ஆட்சியை மீளுருவாக்கம் செய்ய பாடுபட்ட முஜத்தித். அவருக்கு அருகில் வாழ வாய்ப்புப் பெற்ற பெண் அறிஞர் மரியம் ஜமீலா இப்புத்தகத்தில் மெளதூதியின் வாழ்வையும், தமது காலத்தின் இக்கட்டான பிரச்னைகளில் அவர் எடுத்த நிலைப்பாடுகளையும் விரிவாக விவரிக்கிறார். |