Description |
சிமெண்ட் ஆலைக் கட்டுமான ஆலோசகராக பணிபுரியும் பொறியாளரான இவர், தமிழில் சிறுவர் கதைகள், அறிவியல் புனைகதைகள், நாவல்கள், மொழியாக்கக் கதைகள், சிறுவர் பாடல்கள் என தொடர்ச்சியாக எழுதி வருபவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க விருது, திருப்பூர் இலக்கிய விருது, திருப்பூர் தமிழ்ச் சங்க விருது, மணிமேகலை மன்ற விருது, நெய்வேலி புத்தகக் கண்காட்சி சிறந்த எழுத்தாளர் விருது, தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற விருது என விருதுகள் பல பெற்றார். |