Description |
நரேஷ் விதவிதமாக எழுதிப் பார்க்க விரும்புவது அவரது கதைகளின் ஊடே பயணிக்கையில் புலப்படுகிறது. அது ஓர் ஆர்வமுள்ள குழந்தையின் அறிதலுக்கான பரவசம், அது பிறந்த கன்றுக்குட்டியின் உற்சாகப் பாய்ச்சல். அந்த துள்ளலும், பரவசமும் மென்மேலும் பதமடைந்து, ஆழம் தொடும் அறிகுறிகளை இந்தக் குறுங்கதைகள் வாசிக்கும் நெஞ்சங்களில் விதைக்கும் என்று நம்புகிறேன். |