Description |
மறைக்காட்டிய ஒளியில் மாநபி அவர்கள் பயணித்து வழிகாட்டினார்கள். அவ்வழி மறுமை வரை நம் வாழ்விற்கு ஒளி காட்டக்கூடியது. மாநபி அவர்களின் வரலாற்றிலிருந்து நமக்கு எண்ணற்றப் பாடங்களும் படிப்பினைகளும் கிடைக்கின்றன. முஹம்மத் நபிகளார் (ஸல்) அவர்கள், தம் தோழர்களை தட்டிக்கொடுக்க வேண்டிய தருணங்களில் தட்டிக்கொடுத்து, சீர்படுத்த வேண்டிய தருணங்களில் சீர்படுத்தி அவர்களை உலகின் தலைசிறந்த தலைவர்களாய் உருவாக்கினார்கள் என்பது வரலாறு. வரலாறு நெடுகிலும் புன்முறுவல் பூத்த முகத்துடன் இருந்த, இருக்கச் சொன்ன நபி (ஸல்) அவர்கள் சில வேளைகளில் கோபத்தால் முகம் சிவந்தவர்களாகத் தமது தோழர்களைக் கண்டித்துச் சீர்படுத்தினார்கள். அதிலிருந்து நமக்குக் கிடைக்கும் படிப்பினைகள் என்ன என்பதை வரலாற்று நிகழ்வுகளோடு எடுத்துரைக்கிறது இந்நூல். |