Description |
சொற்களின் புதிர்பாதை மனிதரோடு பழகுவது வேறு, மனித உடம்போடு பழகுவது வேறு. மனதைத் திறப்பது போலத் தான் மனித உடம்பைத் திறப்பதும் என்று தனது நாவலில் சொல்கிறார் எழுத்தாளர் கி.ராஜநாராயணன். எவ்வளவு அழகான வார்த்தைகள். எத்தனை உயரிய உண்மை. இப்படித் தன் வாசிப்பில் கண்ட அபூர்வங்களைக் கட்டுரையாக்கி தந்திருக்கிறார் எஸ். ராமகிருஷ்ணன். |