Description |
‘கராத்தே’ முட்டன் ஆட்டுக்கடாவை உங்களுக்குத் தெரியுமா? இந்த ஆடு ஒரு சாகச நாயகன். சிறுவன் சின்னுவுடனும் கராத்தே மாஸ்டர் கிம்கிம் குமாருடனும் இணைந்து இந்த ஆடு பல சாகசங்களைப் புரிந்திருக்கிறது. முட்டன் மோதியதால் வலியால் துடித்தவர்கள், திருந்தியவர்கள் யார் யார் தெரியுமா? போலீஸ்காரர், ‘ஆடு திருடன்’ பிச்சு, குடிகார முத்து ஆகியோர் மட்டுமில்லை. மரக் கொள்ளையர்களும் அதன் தாக்குதலில் வீழ்ந்திருக்கிறார்கள். ஒரு கிராமத்தின் ஒட்டுமொத்த மதிப்பையும் அன்பையும் பெற்றிருக்கும் முட்டனும் அதன் நண்பர்களும் இடம்பெற்ற விறுவிறுப்பான, புத்திசாலித்தனம் நிறைந்த சாகசக் கதை இது. |