Description |
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான பல நாவல்கள் இன்று பதிப்பில் இல்லை. ஆனாலும் பெரு முயற்சியுடன் அவற்றை நூலகங்களில் தேடிப் படித்துக் கட்டுரைகளை எழுதியுள்ளார் இரமேஷ். அத்துடன் நாவல்கள் குறித்து இதுவரையிலும் வெளியான பல நூல்களையும் தேடிப் படித்துத் தன் கட்டுரைகளுக்குத் தரவுகளைச் சேகரித்துள்ளார். இவ்வாறான முயற்சியின் வழியாகவே நாவல் இலக்கியம் குறித்த முழுமையான வரலாற்றை உருவாக்க முடியும். அந்த முயற்சியின் முதற்படியாக இந்நூலை நம்பிக்கையுடன் சொல்ல முடியும். |