Description |
சீனாவில் நீண்ட காலமாக முஸ்லிம்கள் மீதான இனப்படுகொலை தொடர்ந்து வருகிறது. அதனை திட்டவட்டமாக "Detention camp" "Re-Education camp" என்ற பல பெயர்களில் செய்து வருகிறார்கள். இந்த திட்டத்தை தான் இந்திய அரசும் NRC என்ற பெயரில் "Detention camp"களை உருவாக்கி இந்தியாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறது. நமது இராணுவ தலைமை தளபதி கூட, சீனாவில் இருப்பதை போல இத்தகைய தடுப்பு சிறை இந்தியாவில் (காஷ்மீர்) அவசியம் என்று சமீபத்தில் கூறியிருந்தார். இதனை நாம் முன்கூட்டியே உணர்ந்துதான் சீனாவில் நடக்கும் கொடுமைகளையும் அதனை இந்தியாவில் நடைமுறைப்படுத்த திட்டமிடுகிறார்கள் என்பதனையும் 2019 மே மாதம் வெளிவந்த நம் வைகறை வெளிச்சம் இதழில் குறிப்பிட்டிருந்தோம். தற்போது தான் சீனாவில் நடக்கும் கொடூரங்கள் வெளி உலகில் பேசப்படுகிறது. அதனால் சீனாவில் நடந்து வருகிற படுகொலையின் தொகுப்பினையும், இந்தியா சந்திக்க இருக்கிற ஆபத்துகளையும் தமிழ் மக்களுக்கு எடுத்துரைக்கவே இச்சிறு நூல். |