Description |
அனாதி காலந்தொட்டு தமிழர்களின் கலை, பண்பாட்டு வெளிப்பாடுகளின் ஒரு பகுதியாக விளங்கும் ஆடற்கலையின் வரலாற்றை இலக்கிய கல்வெட்டுச் சான்றுகளோடு எடுத்துக்கூறி நிறுவும் நூல். தமிழ் இலக்கியத்திலும் ஆடற்கலை வரலாறு, நுணுக்கங்கள் ஆகியவற்றில் ஆழமான கல்வி, ஆய்வு, பயிற்சி கொண்ட ஆசிரியர்களின் ‘காமம் செப்பாது கண்டது மொழியும்’ நூல். ஆனாலும், அறிந்து கொள்ளும் ஆர்வம் கொண்ட எல்லோரும் எளிதில் வாசித்துப் புரிந்து கொள்ள வழிவகுக்கும் தமிழில் தந்துள்ளனர், நூலாசிரியர்களான பேராசிரியர். ம.சே.இரபிசிங், ஆர்.அகதா ஆகியோர். |