Description |
கிராமத்து வெளிசார்ந்த வாழ்க்கையைப் பதிவாக்கியுள்ள என். ஸ்ரீராமின் கதைகள், இனவரைவியல் தன்மையுடன் மண்ணுக்கு நெருக்கமானவை. இவரின் கதைகள், எளிய மனிதர்கள் அன்றாடம் எதிர்கொள்கிற பிரச்சினைகள் ஏன், இப்படி எல்லாவற்றையும் சிதைக்கின்றன என்ற கேள்வியை வாசிப்பின் வழியாக எழுப்புகின்றன. மதிப்பீடுகள் சிதலமாகியுள்ள கிராமத்துச் சூழலில், மனித இருப்புக் குறித்துக் கதைக்கிற ஸ்ரீராம், பெரும்பாலான புனைகதைகளில் முக்கியமான திருப்பங்களைப் பற்றி விளக்கிடாமல் மௌனம் சாதிக்கிறார். எழுத்துபோலவே மௌனமும் வலிமையானது என்றநிலையில் வாசகன் பிரதிக்குள் தொடர்ந்து பயணிக்கவேண்டியுள்ளது. மரபான கதைசொல்லலில் இருந்து விலகிநின்று சித்திரிக்கிற இத்தகைய சம்பவங்கள்தான் இவரின் தனித்துவம். |