Description |
மொழியின் ஆழத்துக்கும் சமகாலத்துக்கும் சரமாரியாக ஊஞ்சலாடும் பிரயோகம் க.சீ.சிவகுமாரின் எழுத்துக்கு இருக்கிறது. பால்யத்தின் ஏக்கங்கள், மகிழ்ச்சிகள். வாலிப காலத்தின் துடிப்புகள்,சாகசங்கள்.எப்போதும் வாழ்வில் இடறும் அறியாமை, எதிர்பாராமை ஆகியவற்றோடு பெண் விடுதலை பற்றிய கனவுச் சித்திரம் ஒன்றையும் இந்த குறுநாவல்கள் காட்டுகின்றன. துயரங்களினூடாக புன்னகையையும், தொடர்ந்த சிரிப்புக்கு இடையேயும் ஆழ்ந்த துயரத்தையும், இந்தப் புத்தகத்தின் எந்தப் பக்கமும் உங்களில் எழுப்பலாம். |