Description |
‘சோரி சோரி’ எனும் இந்திப் படத்தில் நடிகர் ராஜ்கபூரை முதன்முதலில் படம் எடுக்கத் தொடங்கிய நேஷனல் செல்லையா அவர்கள், ரஜினியின் ‘பாட்ஷா’ வரை 400 படங்களுக்குமேல் புகைப்படக் கலைஞராக பணியாற்றியுள்ளார். பெரியார், காமராஜர், அண்ணாதுரை, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, சிவாஜி கணேசன், ரஜினி, கமல் போன்ற தமிழக அரசியல் மற்றும் கலையுலக ஆளுமைகளுடன் பணியாற்றியதோடு கலைமாமணி விருதும் பெற்றவர். இவரின் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக தமிழக அரசின் கலைமாமணி விருது 2007 ஆம் ஆண்டு இவருக்கு விருது வழங்கப்பட்டது. |