Description |
வாழ்விலிருந்து வாழ்வுக்குள்ளேயே வாழ்விழக்கும் ஜெயந்தனின் மாந்தர்களுக்கு இன்னல்களிலேயே பல வேறுபாடுகள். தரிசிக்கும் மனிதர்களின் பார்வையிலேயே தனது உரையாடலைத் தொடங்கும் சுதந்திரமான எழுத்துக் குணம் அவருக்கு இருக்கிறது. இக்காரணத்தால் உணர்ச்சிச் சுழிப்புகள் நிறைந்ததொரு பேருண்மையான கரு கதையாகத் தோன்றி, மிகத் துல்லியமாக மனித இருப்பை நோக்கி விரைகிறது. |