Description |
தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் வனவியல் பட்டம் பெற்ற, அதியமான் கார்த்திக் தற்போது பணி நிமித்தமாக ஆப்பிரிக்க நாடுகளிலும் இந்தியாவிலும் என மாறி மாறி வசித்து வருகிறார். ஆப்பிரிக்காவின் 25க்கும் மேற்பட்ட நாடுகளில் தொடர்ச்சியாக பயணம் செய்துகொண்டிருப்பவர். தமிழில் மிகக்குறைவான ஃபேன்டஸி நாவல்களின் வரிசையில் ‘கடவுளின் நாற்காலி’ மிக முக்கியமன இடத்தைப் பெற்றுவிடும் என்று நம்புகிறேன். துவங்கிய வேகத்தில் 200 பக்க நாவலை வாசித்து முடித்த அனுபவம் பதிப்புக்குழுவுக்கே ஆச்சரியமானது. ஒரு வகையில் இக்கதையின் பிரமிக்கத்தக்க அளவுக்கு ஒரு ஹாலிவுட் அசத்தல் என்றும் சொல்லலாம். |