Description |
மக்களிடம் சென்றடையுங்கள் வாழ்க்கையை, வாழ்ந்ததை, வாழாததை, நடந்ததை, நடக்காததை, அத்தனையையும் ‘ஈரஞ்செமித்த நிலத்தின்’ பயிர்போல செழுப்பமாய்ச் சொல்லுகிற மக்களின் வாழ்வியலில் இருக்கிறது மெய்யியல். அவர்களிடம் தேடவும் அடையாளம் காணவும், தொகுக்கவும் தனித்திறன் நமக்கு வேண்டும். பல ஆயிரம் ஆண்டுகள் முன்னரிருந்த சமுதாய அமைப்பிலுள்ளிருந்து எழுந்த புராணங்களில், பாரதத்தில், வேதங்களில், தொன்மங்களில் மக்களின் மெய்யியல் கிடைக்காது. இவ்வாறு மக்களிடமிருந்தே தனக்கான எழுத்தை உருவாக்குகிறார் பா.செயப்பிரகாசம் |