Description |
குண்டுசிக்குத் தலை ஏன் பெரியதாக இருக்கிறது? அதுக்குத் தலை வலிக்காதா? என்று தனது நண்பரின் இரண்டாவது படிக்கும் மகள் தன்னிடம் கேட்டபோதுதான் இந்த நாவலுக்கான முதற்பொறி தனக்குள் விழுந்ததாக கூறுகிறார் எஸ்.ராமகிருஷ்ணன். சிறுவர்கள் உலகைப் பார்க்கும் விதம் முற்றிலும் வேறுபட்டது. குழந்தைகள் எந்தப் பொருளையும் அதன் பயன்பாடு சார்ந்து மட்டும் யோசிப்பதில்லை. உயிரற்ற பொருட்களை என நம் ஒதுக்கி வைத்தவற்றிற்கு உயிர் கொடுக்கிறார்கள் சிறுவர்கள். பொருட்களின் விநோத உலகிற்குள் பயணம் செய்ய ஆசைப்படுகிறார்கள். |