Description |
சமாதானத்தின் சின்னமான புறாவை இந்த நாவலின் கதபாத்திரமாகக் கொண்டு, இளம் உள்ளங்களில் வெளிச்சத்தைப் பரப்புவது தனது படைப்பின் முக்கிய நோக்கமாக இருந்தது என்று சொல்லும் அல்கா, தன் பன்னிரண்டாவது வயதில் உலகின் முதல் குழந்தைகளுக்கான நாவலை எழுதி இருக்கிறார். ஏதேதோ பாதைகளில், வழி தெரியாமல் உணர்வுகளுக்கும் உறவுகளுக்கும்கூட நேரம் ஒதுக்க முடியாமல் பயணிக்கும் வாழ்க்கையில் விடைதேட, நம்மிடமிருப்பது வாசிப்பு எனும் ஒற்றைச் சாவி மட்டுமே குழந்தைகளிடம் அதைக் கொண்டு சேர்ப்பதற்கான எளிய முயற்சியே சிச்சுப்புறா என்று கூறும் சுகானா இந்நூலை மொழிபெயர்க்கும்போது இரண்டாமாண்டு கட்டிடவியல் மாணவி. திருப்பூரின் அங்கம்மாள் – முத்துச்சாமி நினைவு அறக்கட்டளை விருதினைப் பெற்ற நூல் இது. |