Description |
ஆடிப்பாவைபோல’ என்ற நாவல், அதன் பெயர்சுட்டுவதுபோல இரு வடிவங்கள் கொண்டது… முன்பு ஆசிரியனை மையமாக்கி நாவலை அணுகினார்கள். ஆசிரியனின் ‘மரணத்துக்கு’ப்பின் வாசகனின் நோக்கில் நாவலை அடையாளப்படுத்துகிறார்கள். ஆகவே மூன்று வகையாக இந்த நாவலை வாசிக்கலாம். இளங்காதலர்கள் கதையில் ஊடாடினாலும் அவர்களுக்குத் தொடர்பில்லாமல், திராவிட அரசியலின் இந்தி எதிர்ப்புக்கால வரலாறு வருகிறது. இன்றைய கணினி, கிண்டில்,போன்ற எந்திரங்கள் மூலம் வாசிப்பதற்கு ஏற்ற கதைசொல் உத்தி. இயல்களைத் தாண்டிப்போய் வாசிக்கும்போது நாம் இடைவெளி விடுகிறோம். அந்தத் தாண்டுதல் ஒரு புது அர்த்தமாக அமைகிறது. 21-நூற்றாண்டிற்குரிய இலக்கியம் தமிழில் கால் வைக்கிறது. |