Description |
“கல்வி வாழ்க்கைக்கான தயாரிப்பு அல்ல, கல்வியே வாழ்க்கைதான்” என்கிறார் கல்வியாளர் ஜான்டூவீ. இது மாதவனின் கல்வி குறித்த எழுத்துக்களில் மீண்டும் மீண்டும்வெளிப்படுகிறது. கல்வியின்சாராம்சத்தை உணர்ந்த, கல்வி குறித்த பல சிந்தனைகளை உள்வாங்கிய,ஆசிரியர்பணி மூலம் ஆழமான அனுபவம் பெற்ற , கல்வி அமைப்பின் நெளிவுசுளிவுகள் தெரிந்த மாதவன் கல்வி பற்றிய எதிர்பார்ப்புகளை விவாதிக்கும்போது கல்வியின் சமூகப்பரிமாணங்கள் நமக்குப்புலனாகின்றன. மாதவனின் குழந்தைமையைக் கொண்டாடுவோம் புத்தகம் படித்தவர்கள் அவருக்கு குழந்தைகளின் உலகம் எவ்வளவு நன்றாக தெரியும் என்று அறிவர். ரயிலில் நீண்டபயணம் செல்லும்போது உலகறிந்த, சுவையாகப் பேசத்தெரிந்த ஒருவர் கிடைத்தது போல அனுபவம் இந்தப்புத்தகம். மாதவனின் குரல்அதிகம் உயர்த்தாமல் அதேநேரம் உறுதியுடனும், நகைச்சுவையுடனும், கல்வி குறித்த ஆழமான சிந்தனைகளை முன்வைத்து ஒலிக்கிறது. கேட்டுக்கொண்டேஇருக்கலாம்." - பேரா. ஆர். இராமானுஜம் அவர்களின் அணிந்துரையிலிருந்து |